பாஜக அரசின் மலிவான அரசியல் காங்.கண்டனம்

இந்நிலையில் குடியரசு தின விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் , உள்நாட்டு பிரமுகர்கள், உயரதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
இந்தவிழாவில், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சோனியாவுக்கு, முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர், ராகுலுக்கு நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
4வது வரிசையில் அமர்வதில் ராகுல் காந்திக்கு பிரச்னை ஏதும் இல்லை என்றும், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பாஜக மலிவான அரசியல் செய்வதாக அதில் குறிப்பிட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஎதிர்ப்பை மீறி கொடியேற்றினார் மோகன் பகவத்..
Next Postகெஞ்சும் இசையமைப்பாளர் .
