பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்யும் ‘இ – வாலட்’ சேவை !

பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அதன் சந்தாதாரர்கள் எளிய முறையில் பணம் செலுத்துவதற்கு, ‘மொபிக்விக்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘இ – வாலட்’ சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., தலைவர், அனுபம் ஸ்ரீவத்சவா கூறியதாவது:-
பி.எஸ்.என்.எல்., சந்தாதாரர்கள், ‘ஆன்லைன்’ மூலம், மிக சுலபமாக பணம் செலுத்துவதற்கு, ‘இ – வாலட்’ எனப்படும், மின்னணு பணப் பை சேவையில் ஈடுபட்டுள்ள, ‘மொபிக்விக்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளோம். இதன் மூலம், நிறுவனத்தின், 10 கோடி சந்தாதாரர்கள், ‘மொபிக்விக்’ வாயிலாக, ஆன்லைனில் பணம் செலுத்துதல், ரீ – சார்ஜ் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும். இந்த வசதியை, ஸ்மார்ட் போன் மற்றும் பியூச்சர் போன்களில் பெறலாம். இதனால், கிராமப் புறங்களிலும், நிறுவனத்தின் தொலை தொடர்பு சேவைக்கு, சந்தாதாரர்கள் சுலபமாக பணம் செலுத்தலாம்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஅடாடா இனி தமிழ் நாட்டில் கரண்ட் இருக்காதா ?
