பள்ளி அறையை படுக்கை அறையாக மாற்றிய ஆசிரியர்: கிராம மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம்

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் அஸ்வரப்பேட்டை மண்டலம் நெமலிபேட்டை பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா ராமதாஸ்.
அவ்வாறு தினந்தோறும் பள்ளிக்கு வரக்கூடிய ராமதாஸ் அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்திற்கு புறம்பான உறவை வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் பள்ளி நேரத்தில் அந்த பெண்ணுடன் ராமதாஸ் இருப்பதை அறிந்த கிராம மக்கள் அந்த பெண்ணின் கணவருடன் சேர்ந்து ராமதாசை பள்ளியில் இருந்து இழுத்து வந்து கிராமம் மத்தியில் மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்வராவ்பேட்டை போலீசார் கிராமத்திற்கு சென்று ஆசிரியர் ராமதாசை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக நடத்தி வருகின்றனர் .
பள்ளியில் மாணவர்களுக்கு நல்ல போதனை செய்து இளம் தலைமுறையினருக்கு உதாரணமாக திகழக்கூடிய ஆசிரியர் இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஆசிரியரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து ஆசிரியர் சமூகம் இது போன்ற சிலரால் அவப்பெயர் ஏற்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
