Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பல நாட்களுக்கு பின் தமிழகத்தில் பேருந்து சேவைகள் துவங்கியது..

On June 1, 2020
Two-months-after-the-start-of-the-bus-service-in-Tamil-Nadu
Share

இன்று முதல் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது அவற்றில் ஒன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 50 வீத பேருந்துகள் ஜூன் 1 முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் பேருந்துகள் ஓடத் தொடங்கின. ஏற்கனவே 8 மண்டலங்களாக போக்குவரத்து கழகம் பிரிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒவ்வொரு மண்டலத்திற்குள்ளும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. பேருந்துகளில் பயணிகள் பின்பக்க படிக்கட்டுக்கள் மூலம் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதும் பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் கிருமி நாசினி கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் பேருந்தில் 60% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதற்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளை இயக்குவதற்கு முன் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டதாகவும் டிரைவர் கண்டக்டர்கள் முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.