திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம் !!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 19-ல் தொடங்குகிறது.
தெய்வானை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனை முடிந்து காப்பு கட்டப்படும். அன்றிரவு 7.00 மணிக்கு தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த உற்சவம் நடைபெறும்
மே 28 அதிகாலை சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7.00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர்.
மே 29-ல் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை எழுந்தருளி மொட்டையரசு திருவிழா நடைபெறும்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
