தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் எந்த நிலையிலும், எந்த காலத்திலும் தேசிய கட்சிகள் காலூன்ற இடமில்லை என்று கூறிய அவர், தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையம் தன்னை அழைத்தால் செல்வேன் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் அனுமதி பெறாமலும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் வகையில் போராடுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழகத்தில் எந்த காலத்திலும் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பள்ளி நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னிடம் ஆலோசித்த பின்னர்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவுகளை அறிவிக்கிறார் என தெரிவித்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
