Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சில நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை, அதிபர் டிரம்ப் அதிரடி!

On September 25, 2017
tru_3095232f
Share
tru_3095232f  , வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல அந்நாட்டு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதை எதிர்த்து அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் டிரம்ப்ப விதித்த தடைக்கு தடை விதிக்க அந்நாட்டு கோர்ட் மறுத்து விட்டது. இந்நிலையில் டிரம்ப் கொண்டு வந்த பயண தடை சட்டம் முதற்கட்டமாக வரும் அக்.,18 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் வடகொரியா, வெனிசுலா, ஈரான், சாட், லிபியா, சிரியா, ஏமன், சோமாலியா ஆகிய நாட்டு குடிமகன்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் தடை செய்யப்பட்ட நாடுகளில் உள்ள அரசு அதிகாரிகள் அரசு சம்மந்தமாக சந்திப்புகளில் கலந்து கொள்ள அவர்களுக்கு மட்டும் விலக்க அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.