Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கவர்னரை பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழிசை சௌந்தரராஜன்!

On January 27, 2025
WhatsApp Image 2025-01-27 at 11.10.30
Share

ஆளுநர் குறித்து பேச துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- திமுக ஆட்சியில் பல தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அதே அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்று மொழியைக் கற்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

இதைக் கேட்டால் ஹிந்தி திணிப்பு என்பார்கள். அதுபோல வள்ளுவரின் கருத்தும் அனைவருக்கும் சமம். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் ஒரு முனிவரைப் போன்று அவரது ஆடை அணிகலன்கள் இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளன. எனவே, தமிழ் தங்களுக்குச் சொந்தமானது என்பது போல் திமுக நடந்துகொள்வதை ஏற்க முடியாது. முதல்வர் ஸ்டாலினுக்கு இணையான உரிமை தமிழிசைக்கும், தமிழறிஞர்கள் மீதும் உள்ளது.

தமிழகத்தின் ஓராண்டு செயல்திறனை வெளிப்படுத்தும் விதமாக தமிழகம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என்று ஆளுநர் கூறியுள்ளார். மக்கள் அப்படி நினைக்கிறார்கள். கவர்னர் தபால்காரரின் பணியை மட்டுமே கவனிக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார். முதல்வர் ஸ்டாலினின் மகன் இல்லை என்றால் உதயநிதிக்கு என்ன அடையாளம்? அதனால், கவர்னர் பற்றி பேச கூட உதயநிதிக்கு தகுதி இல்லை. பாஜக மாநிலத் தலைவர் சிறப்பாக செயல்படுகிறார். கட்சியில் தொண்டனாக பணியாற்றி வருகிறேன். எனக்கு பதவி ஆசை இல்லை. மாநிலத் தலைவர் பதவிக்காக நான் பணியாற்றுவது உண்மையல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.