உங்களால் நான் உங்களுக்காகவே நான்... ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தனது இறுதி மூச்சு வரை முழங்கியவர் ஜெயலலிதா. எந்த ஒரு பொதுக் கூட்டத்திலும், தேர்தல் பிரசாரங்களிலும் இந்த ஸ்லோகனை பயன்படுத்தாமல் அவர் இருக்கமாட்டார். அவரது பிறந்த நாளன்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,புரட்சி தலைவி அம்மா அவர்களின் பாத சுவடுகளை பின்பற்றி மாநிலம் தழுவிய மக்கள் நல உதவிகள் வழங்கும் விழா...
இதை வைத்துக் கொண்டு அவர் எப்போது நினைக்கிறாரோ அப்போது தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்தோ அரசியல் தலைவர்ரகளின் கருத்துக்கு எதிர் வினையாற்றுவதோ செய்வார். இந்நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட போகிறார். அதன்படி அவர் தனது டுவிட்டரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,புரட்சி தலைவி அம்மா அவர்களின் பாத சுவடுகளை பின்பற்றி மாநிலம் தழுவிய மக்கள் நல உதவிகள் வழங்கும் விழா... என்று குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா உங்களால் நான் உங்களுக்காகவே நான் என்ற புதிய ஒரு ஸ்லோகனை பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
