இருட்டு கடை என்று தான் பெயர். அந்த குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் கடன் உள்ளது! - கனிஷ்கா மாமனார் பேட்டி!

திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் மகள் கனிஷ்காவிற்கும் கோயம்புத்தூரை சார்ந்த பல்ராம் சிங்கக்கும் கடந்த பிப்ரவரியில் தான் கல்யாணம் நடந்தது.
இருவருக்கும் திருமணமாகி 40 நாட்களே ஆன நிலையில், கணவர் பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் இருட்டுக்கடை அல்வா பிசினசை வரதட்சணையாக கேட்பதாக நெல்லை காவல் நிலையத்தில் கனிஷ்கா நேற்று (ஏப்ரல் 16) புகார் அளித்தார்.
"எங்கள் பிசினஸை எழுதிக்கொடுக்கவில்லை என்றால் உங்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன் என்று தாலி கட்டிய அரை மணி நேரத்தில் எங்கள் உறவினர் முன்வைத்து கடுமையாக பேசினார்கள். காசுக்காக என் மகளை கல்யாணம் செய்திருக்கிறார்கள்" என அந்த புகாரில் கூறியிருந்தார்.
இவர்களது புகார் குறித்து கனிஷ்காவின் கணவரும், மாமனாரும் விடுத்த செய்திக்குறிப்பில் "சாதாரண குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டும் என்று தான் அந்த பெண்ணை கல்யாணம் செய்தோம். 350 நாளுக்கு முன்னர்தான் கனிஷ்காவின் கைக்கு கடை வந்துள்ளது. அதற்கு முன் ஒரு மெக்கானிக்கின் மனைவி. ஒரு கார் வொர்க்ஷாப் நடத்தி வந்தார்கள். அவர் கூட பார்ட்னராக இருந்தவர்களின் கையெழுத்தை இவரே போட்டுக்கொண்டு கடையை எடுத்துக்கொண்டதாக நெல்லை டிசி அலுவலகத்தில் புகார் உள்ளது. இந்த திருமணத்தில் ஒரு ரூபாய்கூட நான் வரதட்சணை வாங்கவில்லை. என்னுடைய திருமணத்துக்கும் நான் வரதட்சணை வாங்கவில்லை.
இந்த கடை உரிமையாளர்களாக இருந்த சுலோச்சனா பாய், ஹரி சிங் மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றளவும் பேசப்படுகிறது. இவர்கள் இறந்தவுடனேயே இந்த கடை இவர் கைக்கு வந்துவிட்டதாக தெரிகிறது.
இந்த கடையை எடுப்பதற்காக முறைகேடு செய்திருக்கிறார்கள். திருநெல்வேலி ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதற்கான ஆவணங்கள் இன்னும் இருக்கிறது. டாக்குமெண்ட் மெயிட்டனஸ் சென்ட்டருக்கு சென்றுவிட்டதால், இதில் நான் எதாவது செய்துவிடுவேனோ என பயந்துதான் என் மீதும் புகார் கூறுகின்றனர். இருட்டுக்கடை அல்வா என்ற பெயர் இருக்கிறதே தவிர, இவர்களுக்கு திருநெல்வேலி இந்தியன் வங்கியில் 5 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இவர்கள் இரண்டு கார் வைத்திருந்தார்கள். அதற்கும் தவணை செலுத்த முடியாமல் கடந்த வாரம் இன்னோவா காரை விற்றுவிட்டனர். அந்த பெண்ணுக்கு இரவு நேரங்களில் தேவை இல்லாமல் போன் எல்லாம் வருகிறது. இதுகுறித்து நாங்கள் கேட்ட போது, அந்த பெண் சிங்கிள் சைல்டு என்பதால் நண்பர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுடன் தான் பேசுகிறார் எனக் கூறி வருகின்றனர். மருமகள் கனிஷ்காவும் அங்கே போறேன் இங்கே போறேன என ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு 2 - 3 மணி நேரத்துக்கு வெளியே சென்றுவிடுகிறார். செல்போனில் தொடர்பு கொண்டால், பார்லருக்கு போய்விட்டதாக கூறுகிறார். ஒரு 5 மணி நேரமாக ஒரு பெண் வீட்டுக்கே வரவில்லை என்றால், என்ன சொல்வது? இதுபோன்று, விட்டுவிட்டு இருக்கும் குடும்பமும் எங்களுடையது கிடையாது. இதையெல்லாம் கேட்டதால், சந்தேகப்படுகிறீர்களா? என்ற ரீதியில் பிரச்சினை ஆகிவிடுகிறது.தற்போது என் மகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, கனிஷ்கா திசைதிருப்பிவிட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே, மூன்று முறை திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நின்றுபோய் இருக்கிறது. என்ன காரணத்தால், திருமணம் நிறுத்தப்பட்டது என்ற காரணம் தெரியவில்லை. இந்த விவரங்களும் எங்களுக்கு திருமணம் முடிந்தபிறகுதான் தெரியவந்தது
அந்த பெண் எங்கள் வீட்டில் இருந்து போகும் போது என் மனைவி எங்கள் வீட்டிலேயே இல்லை. அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். அந்த பெண்ணின் அம்மாவுக்கு மனநோய் இருக்கிறது. எந்த வித முகாந்திரமும் இல்லாமல், அவருடைய மகள் குறித்த உண்மையெல்லாம் தெரியவந்ததால் எங்கள் மீது குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். டிபெண்டர் காரை இவர்கள் புக் செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் அந்த காரை நான் தான் புக் செய்தேன். அதற்கான ஆதாரங்கள் என் கையில் உள்ளது. குழந்தைகளின் வாழ்க்கைக்காக சமரசமாக போகலாம் என்று நான் மெசேஜ் அனுப்பினேன். ஆனால் அதை அவர்கள் டெலிட் செய்துவிட்டு மாற்றி சொல்கிறார்கள்" என்று இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கவிதா மீது குற்றம் சாட்டினார்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
